அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Wednesday 27 July 2016

7வது ஊதியக்குழு

ஊதியக்குழு வந்துவிட்டது

     கொடுப்பதை   வாங்கிக்கொள்      --   மத்தியஅரசு         
         
குறைவானதை ஏற்க மாட்டோம்     ----       ஊழியர் சங்கங்கள் 
         
கிடைப்பதை கெடுத்து விடாதே !    ----       ஊழியர்கள் 

ஆரூடத்தை கடந்து ,அச்சத்தை போக்கி ,அமைதியாக ,ஊதியக்குழுவின் பரிந்துரையை அப்படியே உத்தரவாக வெளிவந்துவிட்டது .ஆம் ஏழாவது ஊதியக்குழுவின் உத்தரவு 25.07.2016 அன்று கெசட்டட் அறிவிப்பாக வந்தது .
1.ஊதியநிர்ணயம் --  31.12.2015இல் அடிப்படைஉதியம் + தகுதியூதியம்   இதை 2.57 மடங்கினால் பெருக்கி அதற்கு அடுத்தநிலை PAY MATRIX படி நிர்ணயிக்கப்படும் .

2.புதியஊதியம்  01.01.2016 முதல் அமுல்படுத்தப்படும் 

3.நிலுவைத்தொகை  2016-2017 நிதியாண்டில்  வழங்கப்படும் 

4.ஆண்டு ஊதியஉயர்வு  ஜனவரி 1/ஜூலை 1 இதில் ஒன்று ஊழியர்களின் பணிக்கு சேர்ந்தநாள் அல்லது MACP பதவி உயர்வு நாள் அடிப்படையில் வழங்கப்படும் .

5.பஞ்சபடியை தவிர இதர அலவன்சகள் அனைத்தும் உயர்த்தப்படாத ஊதியத்தில் என்ன வாங்கினோமோ அவை வழங்கப்படும் .

6.மெடிக்கல் ,LTC ,TOUR TA   போன்றவைகள் நீடிக்கும் .

7.CGEGISபிடித்தம்  பழைய முறையே தொடரும்  

8.புதிய பென்ஷன் திட்டத்தை முறைப்படுத்த (மாற்ற அல்ல )DOP & Training ,மற்றும் Finance செயலர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் .


9.வழக்கம்போல் அனாமலி கமிட்டி அமைக்கப்படும் ( வழக்கம்போல் பல ஆண்டுகளுக்கு பிறகு அனாமலி கமிட்டி கொடுக்கும் பரிந்துரை அடுத்த அதாவது எட்டாவது ஊதியக்குழுவிற்கு அனுப்பப்படும் --இது கடந்தகால (கசந்தகால )வரலாறு .

No comments:

Post a Comment